ஆர்ப்பாட்டத்தை தடை செய்தமை – பொலிஸ் அதிகாரிகள் மீதான வழக்கு தள்ளுபடி!

பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்காமல் தள்ளுபடி செய்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளீன் தில்ருக் ஆகியோருக்கு எதிராக ஊடக செயற்பாட்டாளரான தரிந்து ஜயவர்தனவினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை இன்று (வெள்ளிக்கிழமை) ஆராய்ந்த கோட்டை நீதவான் திலின கமகே, குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முதல் கட்டத்திலேயே தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.

குறித்த இரு பொலிஸ் அதிகாரிகள் அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தடை செய்து தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தை மீறியதாக தெரிவித்து இந்த தனிப்பட்ட முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *