இலங்கையில் நடைபெறும் ‘சூர்யா 42’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு!

சிறுத்தை, விஸ்வாசம், அண்ணாத்த, உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை வனப்பகுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் படத்தின் பெரும் பகுதியை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘சூர்யா 42’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *