
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஹொரண பிளான்டேசனுக்கு உரித்தான கவரவிலை தோட்டத்தில் விவசாய தோட்டத்தை நாச படுத்திய பகுதிக்கு ஜீவன் தொண்டமான் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு அத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அங்கு நடந்த சம்பவம் பார்த்து அதிர்ச்சி அடைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாய பிரிவினருக்கு அறிவித்தார்.
இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதுடன், பெருந்தோட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கு தீர்வு காண உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கவரவில்லை தோட்டத்தில் உள்ள முகாமையாளரை சந்தித்து பேச முயற்சி செய்த போது முகாமையாளர் வெளியே உள்ள நிலையில் ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான சகல தோட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் தேயிலை தூள்களை ஏற்ற வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
இன்று இந்த விடயம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் குரல் கொடுக்க உள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.