அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கடுவெல, பொமிரிய, கஹந்தோட்டை, கொத்தலாவல, வெலிவிட்ட, ஹேவாகம மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களுக்கு நாளை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.