மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் சேதம்!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக, தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பு ஜேர்மனி நாட்டினால் தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நினைவேந்தலில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர், உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *