யாழ்.பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி!

யாழ்.பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு மிக உணா்வுபூா்வமாக நடைபெற்றுள்ளது.

 

தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் பருத்தித்துறை – நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரா் நினைவு மண்டபத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 


3 மாவீரா்களை மண் விடுதலை போராட்டத்திற்கு அா்ப்பணித்த தாய் ஒருவா் மாவீரா்களுக்கான பொதுச் சுடாினை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியதை தொடா்ந்து கண்ணீா்மல்க, உணா்வுபூா்வமாக மாவீரா்களுக்கான அஞ்சலி நடைபெற்றது. 


அதனை தொடா்ந்து மாவீரா்களின் பெற்றோா்கள் கௌரவிக்கப்பட்டு மரக்கன்றுகள், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நினைவு மண்டபத்தை சூழ புலனாய்வாளா்கள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *