கொழும்பு,நவ 25
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் Chi Shengong இற்கும் இடையில் இன்று (25) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி குறித்து இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என சீன தூதுவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.
சீனா தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை கண்டிப்பதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.