கனடாவில், 134 பயணிகளுடன் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்?

கனடாவில் 134 பயணிகளுடன் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது.

பிளேயர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஓடுபாதையை விட்டு வெளியேறியது.

தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வாட்டர்லூ சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Blyar Airlines இன் F8 501 இல் பயணம் செய்த பயணிகள் இந்த திகில் அனுபவத்தை எதிர்கொண்டனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

விமானம் வான்கூவரில் இருந்து வாட்டர்லூ நோக்கி சென்று கொண்டிருந்தது.

விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி புல்வெளியில் தரையிறங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *