யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கஞ்சா கடத்தல்

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கங்சா ஏற்றி வருவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதிதியில் வைத்து 29 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவானது சூட்சமமான முறையில் கப்ரக வாகனத்தில் ஒழித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலரத்ன தலைமையில்  தீவிர சோதனையின் பின் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்ட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று (26) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *