மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

புலமைப்பரிசில் பெறத் தகுதியுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதியாக மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தற்போது 16,000 பல்கலைக்கழக மாணவர்கள் மகாபொல கொடுப்பனவைப் பெற்று வருவதாகவும் அவர் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
மஹபொல கொடுப்பனவிற்காக வருடாந்தம் 1.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் தற்போது குறித்த கொடுப்பனவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *