மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கி வைப்பு!

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (ஐக்கிய இராச்சியத்தின்) நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நேற்று (சனிக்கிழமை) மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் அருட்தந்தை நவரட்ணம் அடிகளார் தலைமையில் இந்த நிகழ்வும் இடம்பெற்றது.

கல்வி ஊக்குவிப்பு தேவைப்படும் 51 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதி உதவி வருடம் தோறும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் வழங்கி வைக்கப்படுகின்றது.

இந்த நிலையில் 2023 ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு அம் மாணவர்களின் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட விவிலிய ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்கலாநிதி கிறிஸ்ரி ரூபன் பெர்னாண்டோ கலந்து கொண்டதோடு மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *