இரண்டு நாட்களில் பல இடங்களுக்கு மின்தடை ஏற்படும்..! இலங்கை மின்சார சபை தெரிவிப்பு

இலங்கையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் பல பிரதேசங்களில் மின்சார விநியோக தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டாளர் எம்.ஆர்.ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதிக மின்சார கோரிக்கை இல்லாமையினால் நேற்றைய தினம் மின்சார தடை ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை சீனாவிடம் ஒப்படைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை முதல் மின்சார விநியோக நடவடிக்கை முழுமையாக வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமையும் குறிபிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *