முல்லைத்தீவு கடலில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்றொழிலாளர்கள்!

முல்லைத்தீவு கடலில் மூழ்கிய இளைஞர்களை தேடும் நடவடிக்கையில் முல்லைத்தீவு கரையோர கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12.00 மணிவரை ஒளிபாச்சி கண்காணிக்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு-  கள்ளப்பாட்டுப்பகுதி மீனவர் சங்கம், மின்பிறப்பாக்கி கொண்டுவந்து போக்கஸ் லையிட்டுக்களை கடற்கரையில் கட்டி, உடலம் கரை ஒதுங்கும் பகுதியில் கண்காணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் முல்லைத்தீவு தொடக்கம் செம்மலை வரையான கரையயோர பகுதி மீனவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு கடலுக்கள் காணாமல் போன இரண்டு இளைஞர்களையும் தேடும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

நேற்று  குறித்த பகுதிக்கு  யுவதி உள்ளிட்ட நான்கு பேர் வாகனத்தில் வந்து,  அப்பகுதியிலுள்ள கடலில் குளித்தப்போது ஆண்கள் மூவரும் கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா- மதகுவைத்தகுளம் பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய மனோகரன் தனுசன், தோணிக்கல் வவுனியாவினை சேர்ந்த 26 வயதுடைய விஜயகுமாரன் தர்சன், வவுனியா- மதவுவைச்சகுளத்தினை சேர்ந்த 26 வயதுடைய சிவலிங்கம் சகிலன் ஆகியோரே கடலில் காணாமல் போயுள்ள நிலையில் 27 வயதுடைய மனோகரன் தனுசன் என்ற இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏனைய இருவரின் சடலங்களை உறவினர்கள், நண்பர்கள், கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

மேலும் கடலில் இறங்கி தேடமுடியாத நிலையில் உடலம் கடலலையில் அடித்து கரைஒதுங்கும் அல்லது கரைபகுதியில் சடலத்தின் அசைவு ஏதும் தெரியும் என்ற நம்பிக்கையில் கடற்கரையில் காத்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *