நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில் சபை நடவடிக்கையையும் ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்திருந்தது.

எதிரணி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை, சபை அமர்வில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *