எல்.பி.எல்.: கண்டி அணிக்கு ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தம்புள்ளை அணி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி, கண்டி வோரியஸ் அணிக்கு 191 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிலிப் சோல்ட் 64 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கண்டி வோரியஸ் அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் அல் அமீன் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சச்சிந்து கொலம்பகே மற்றும் ரொவ்மன் பவல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து தற்போது 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, கண்டி வோரியஸ் அணி களமிறங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *