நாட்டில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து! ரணில் எச்சரிக்கை

கொரோனா பரவலால் சுகாதார கட்டமைப்பு மற்றும் அரச நிதி என்பவற்றுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் வருடத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் இடம்பெற்றுவரும் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் தொடர்ந்து வளரும்.

சர்வதேச நாணய நிதியம் தயாரித்த மதிப்பீட்டின்படி, பல நாடுகளில் தனிநபர் வருமானம் தொற்றுப்பரவலுக்கு முன் இருந்ததை விட வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கொரோனா நிலைமையின் காரணமாக ஏற்பட்டுள்ள அழிவு, பிராந்திய காலநிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் என்பன அடுத்த வருடத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலுள்ள அனைத்து இலங்கையர்களையும் மீள அழைக்க வேண்டும்! அனுரகுமார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *