துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று மாலை யாழ். சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.
வீதி விபத்துக்களை குறைப்பதற்காக ‘உங்களின் பாதுகாப்பிற்காக நாம்’ எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல இடங்களில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கே.கே.எஸ் பிரதான வீதியிலுள்ள சுன்னாகம் சந்தியில் வைத்து வீதியால் சென்ற துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியச்சகரின் ஆலோசனைக்கமைவாக, மாவட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவு மற்றும் சுன்னாகம் பொலிஸ் போக்குவரத்து பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையினை இன்று முன்னெடுத்திருந்தனர்.

ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! சஜித் வலியுறுத்து