பிரியந்தவின் கொலைக்கு ரஞ்சித் ஆண்டகை இரங்கல்!

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் கொலைக்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இரங்கல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் இரங்கல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த மரணம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மதம் என்ற பெயரில் இவ்வாறான கடும்போக்குடைய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதத்தின் பெயரில் கடும்போக்குவாதிகளின் செயற்பாடுகளால் மதங்களும் பெரும் இழிவு நிலை ஏற்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *