வடமேல் மாகாண ஆளுநர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் தனது 83வது வயதில் உயிரிழந்துள்ளார்.

1938ம் ஆண்டு ஜுன் மாதம் 3ம் திகதி பிறந்த அன்னார், ஶ்ரீலங்கா கமினிஸ்ட் கட்சி ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்திருத்தார்.

2000 முதல் 2004ம் ஆண்டு வரை தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டார்.

தற்போது வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, ராஜா கொல்லுரே இன்று காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *