´சபுகஸ்கந்த எரிபொருள்´சுத்திகரிப்பு பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

´சபுகஸ்கந்த எரிபொருள்´ சுத்திகரிப்பு பணிகள் இன்று (07) செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால் கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

எதிர்வரும் 2 வாரங்களில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது.

இதேவேளை, ஜனவரி மாத நடுப்பகுதியிலும், எரிபொருளை ஏற்றிக் கொண்டு மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரியந்தவின் உடற்பாகங்கள் மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *