இலங்கையில் மேலும் 741 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 741 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 68 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 688 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 11 ஆயிரத்து 251 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *