மானிப்பாய் – சங்கானை – நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை நேற்றையதினம் (06) களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் உள்ளவர்கள் நேற்று மு.ப 10 மணிக்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு, பி.ப. 5 மணிக்கு வந்து வீட்டினை அவதானித்தனர்.
இதன்போது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் சந்தேகநபரைத்தேடி வலைவீசி வருகின்றனர்.