ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கலாம்- விஞ்ஞானி

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலை இந்தியாவில் ஏற்படலாம் என கொரோனா கணிப்பு வியூக நிபுணரும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய புதிய வைரஸ்,  எதிர்வருகின்ற (2022) பெப்ரவரிக்குள் 3ஆவது அலை உச்சத்தை எட்டும்.

இதன்போது நாட்டில் தினமும் 1 இலட்சம் முதல் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம். ஆனால் இது 2ஆவது அலையை விட மிதமானதாகவே இருக்கும்.

தற்போதைய புதிய மாறுபாடு, அதிக பரவும் தன்மையை கொண்டது போல் தெரிகிறது. ஆனால் அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போது வரை இந்த தொற்று தென் ஆப்பிரிக்காவிலுள்ள வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவில்லை. ஆனால் அங்கு தொற்று பரவல் மற்றும்  வைத்தியசாலைகளில் நோயாளிகள் சேர்க்கை போன்ற தரவுகள் நமக்கு தெளிவான பிம்பத்தை தரும்” என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *