சபை அமர்வை புறக்கணித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்றும் போர்க்கொடி

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற அமர்வுகள் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் அரசாங்கத்தின் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினமும் சபை அமர்வுகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *