
கல்முனையில் ஊடுறுவிய கடல் நீர் – மாநகரசபை உறுப்பினர் தலைமையில் நீர் வெட்டும் பணி!

கடல் அரிப்பு கல்முனை பாண்டிருப்பு பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. நேற்று இரவு கடல் அலை பாண்டிருப்பு வீதியை தாண்டி பாய்ந்தது பாண்டிருப்பு மஹா விஷ்ணு ஆலயம் கல்முனை மாமாங்க விநாயகர் ஆலயம் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.
கல்முனையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் தேங்கி நின்றதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் மாநகரசபை ஊழியர்கள் மற்றும் மாநகரசபை இயந்திரங்களின் உதவியுடன் நீர் கடலுக்குள் வெட்டிவிடப்பட்டன. இந்தப்பணி நேற்றும் இன்றும் இடம்பெற்றது. கல்முனை மாநகரசபை மேயர் ஆணையாளர் ஊழியர்களுக்கு உறுப்பினர் கென்றி மகேந்திரன் நன்றிகளை தெரிவித்தார்.