காதலர் தினத்தில் காதலர்களுக்கு விசேட பரிசாம்..! அரசாங்கம் அறிவிப்பு

காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

சபையில் இன்று இதனை அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகளவு மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மகாவலி நதியின் இரண்டு பக்கங்களிலும் ஏனைய நதி கரைகள், சாலைகளில் இந்த மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அத்துடன், காதலுக்கு ஒரு மரம் என்ற எண்ணக்கருவுக்கு அமைவாக, காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவை அரச செலவில் மேற்கொள்ளப்படமாட்டாது. ஏனைய நிதி நிறுவனங்கள் அமைப்புகள் மூலம் இதற்கான அனுசரணையை பெற்றுக்கொண்டுள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *