ஹற்றன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹற்றன் ஓயாவில் பெண்ணொருவரின் சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக்கண்ட பிரதேசவாசிகள், ஹற்றன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன்பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

ஆனால், சடலம் அடையாளம் காணப்படவில்லை. சுமார் 50ற்கும் 60ற்கும் இடையிலான வயது மதிக்கத்தக்க பெண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *