கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டி.எம்.எல்.பண்டாரநாயக்க தமது கடமைகளை இன்று (7) பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட டி.எம்.எல்.பண்டாரநாயக்க தமது கடமைகளை, திருகோணமலையில் அமைந்ததுள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தின் பின்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாடிகோராள, திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட்ட அதிகாரியான இவர், இதற்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரச அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.