
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இலங்கை அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது இந்த அடையாள இலக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடையாள இலக்கத்தை, தேசிய அடையாள அட்டையை தயாரிக்க பயன்படுத்துவதற்கும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து செயல்பாடுகளின்போது பொது மற்றும் தனியார் துறை சேவைகளை அணுகுவதற்கும் வசதியாக இருக்கும்.