வவுனியாவில் இரண்டுகோடி ரூபாய் பெறுமதியான 145 கிலோ கேரள கஞ்சாவை கடத்திச்சென்ற இருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கூளர் ரக வாகனத்தை இன்று பிற்பகல் வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வழிமறித்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த வாகனத்தில் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 145 கிலோ கரளகஞ்சாவை மீட்டதுடன், வாகனத்தையும், அதில் பயணித்த சாரதி உட்பட இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் இரண்டு கோடிரூபாய் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.



பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்! பந்துல