எல்.பி.எல்: ஜப்னா கிங்ஸ் அணிக்கு 111 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், தம்புள்ளை ஜியண்ட் அணி, ஜப்னா கிங்ஸ் அணிக்கு 111 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை ஜியண்ட் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஜியண்ட் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நுவனிந்து பெர்னான்டோ 23 ஓட்டங்களையும் சமிக்க கருணாரத்ன 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், மகேஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் லக்மால் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தற்போது 111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *