<!–
இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை, 1 இலட்சத்தை கடந்துள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சராசரியாக 2 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 53 ஆயிரமாக அதன் எண்ணிக்கை குறைந்திருந்தாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.