ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடை ஒருவர் பாரிஸில் கைது

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சவுதி அரேபிய நபர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் காலித் என்ற நபரை கைது செய்யததாக பொலிஸாரை மேற்கோளிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜமால் கஷோகி கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சவுதி நாட்டவர்களின் இவரும் ஒருவர் என நம்பப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்ட 33 வயதான குறித்த நபர் சவூதியின் முன்னாள் அரச காவலர் என்றும் அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரசாங்கத்தின் முக்கிய விமர்சகரான கஷோகி, 2018 ஒக்டோபரில் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *