நாடாளுமன்றத்துக்கு மீண்டும் திரும்பும் சஜித் அணியினர்

நாடாளுமன்ற புறக்கணிப்பை மேற்கொண்டிருந்த எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன வழங்கிய உறுதிமொழியை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்று சபாநாயகர் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபாநாயகரை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினர்.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவின் மீது தாக்குதல் நடத்த ஆளும் தரப்பினர் முயன்றதாக குற்றம் சுமத்தி, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *