இலங்கையில் பைஸர் 3ஆம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது

இலங்கையில் பைஸர் மூன்றாம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.

பைஸர் மூன்றாம் தடுப்பூசி, 37 ஆயிரத்து 578 பேருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) செலுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 40 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் நேற்று மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு கூறியுள்ளது.

அந்தவகையில் 755 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும் 313 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் 409 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 1, 238 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகதொற்று நோய் விஞ்ஞான பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *