நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள குழு நியமனம்

கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்து, மீள இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான பரிந்துரைகளை முன்வைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்தன,  கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், அனுர பிரியதர்ஷன யாப்பா, விஜித ஹேரத், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *