இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவை தரையிறக்குவதற்கு முன்னர் அவற்றின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும்.
பகுப்பாய்வு அறிக்கையில் எரிவாயு உரிய தரமுடையது என்று உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே அதனை தரையிறக்க அனுமதி வழங்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
பகுப்பாய்வு செய்யப்பட்டு தரம் உறுதிப்படுத்தப்பட்ட வாயுவை உள்ளடக்கிய சிலிண்டர்களில் புதிய ஸ்டிக்கர்களை ஒட்டி சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டது எனவும் தெரிவித்தார்.