ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

வட்டவளை – ரொசல்ல பகுதியில் ரயில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) முற்பகல்,ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள், ரயில் வரும் வேளையில், ரயில் கடவை கடக்க முயற்சித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *