தன்பாலின திருமணத்துக்கு சிலி நாடாளுமன்றம் அங்கீகாரம்

பாராமரியமாக கத்தோலிக்க நாடான சிலியில் தன்பாலின திருமணத்தை அனுமதிக்கும் முக்கிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சட்டம், தன்பாலின தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுக்க உதவுகிறது.

சிலியின் எல்.ஜி.பி.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட காலமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், 2017 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் இயற்றவிடாமல் முடக்கி வந்த நிலையில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சிலி 2015 ஆம் ஆண்டு தன்பாலின தம்பதிகளுக்கு இடையே இருக்கும் சிவில் யூனியன்களை அங்கீகரித்தது. இது அவர்களுக்கு சில சட்டரீதியான பலன்களையும் வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *