அம்பாறையில் இரு வேறு விபத்துக்களில் நால்வர் படுகாயம்

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான பிக்கப் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை வீதியினூடாக பயணம் செய்த நிலையில், வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த பிக்கப் வாகனம் வீதியை விட்டு விலகி இன்று (8) புதன்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் பயணம் செய்திருந்ததாக கூறப்படும் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் உட்பட இருவர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் வாகனம் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது இரு வேறு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *