பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்று முன்தினம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது பூதவுடல் கனேமுல்ல – பொக்குண சந்தி – கந்தலியத்த, பாலுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது இல்லத்துக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் சென்று நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.