கல்யாண தரகரை ஆள் வைத்து தாக்கிய வெளிநாட்டு மாப்பிள்ளை! யாழில் சம்பவம்

வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவர், யாழிலுள்ள பெண்ணை திருமணம் செய்வதற்கு தயாரான நிலையில் அதை தடுத்து நிறுத்திய தரகர் மீது ஆள் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் யாழ்.வலிகாமம் பகுதியில் நேற்று (07) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,

யாழில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை, சுவிஸில் வசிக்கும் 32 வயதான யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொள்ள ஆசையாக இருந்துள்ளார்.

இதனையறிந்த கல்யாண தரகர் ஒருவர் இந்த திருமணத்தை நிறுத்தி உள்ளார்.

இதன்காரணமாக, குறித்த தரகர் மீது ஆள் வைத்து தாக்கியுள்ளார் வெளிநாட்டு மாப்பிள்ளை.

தாக்குதலுக்கு உள்ளான தரகர் கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கொட்டனால் தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இருப்பினும் இச்சம்பவம் தொடர்பில் முழு விபரம் இதுவரையில் தெரியவரவில்லை.

மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *