இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக மேலும் 28 மரணங்கள் பதிவாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (07) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,533 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.