பிரியந்தவை எரியூட்டியபோது செல்பி எடுத்த நபரும் கைது!

பாகிஸ்தான் – சியல்கோட்டில் அடித்து சித்திரவதைக்குட்படுத்திய பிரியந்த குமாரை இறுதியாக எரியூட்டிய கொடூர சம்பவத்தை, புகைப்படம் எடுத்த நபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரை சித்திரவதைக்குட்படுத்தி , அவர் எரிந்துகொண்டிருந்த நிலையில் தனது தொலைபேசியில் செல்பி எடுத்த நபரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

இந்த நிலையில், ஒருவரை படுகொலை செய்து அவரை தீயிட்டு கொழுத்தி அதனுடன் செல்பி எடுக்கும் மனநிலை குறித்து, அந்த புகைப்படம் தொடர்பில் பலர் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து, பிரியந்தவை எரியூட்டி கொன்ற போது அங்கிருந்து புகைப்படம் எடுத்த குறித்த நபரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *