யாழ் – சிவலிங்கப்புளியடி சந்தியில் விபத்து! அவசர சிகிச்சைக்காக இளைஞன் அனுமதி

யாழ்ப்பாணம் – சிவலிங்கப்புளியடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி சிவலிங்கப்புளியடி சந்தியில் மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கர வண்டி என்பன ஒன்றன் பின் ஒன்று மோதியதிலயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் படு காயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் மோதியதில் அருகில் இருந்த வர்ந்த நிலையங்கள் சேதமடைந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலீஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *