பாடசாலைகளில் கொரோனாக் கொத்தணிகள் எதுவும் உருவாகவில்லை! ஹேமந்த

பாடசாலைகளில் கொரோனாக் கொத்தணிகள் எதுவும் இதுவரையில் உருவாகவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பளார் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் நான்கு மில்லியன் பாடசாலை மாணவ, மாணவியரில் சுமார் 400 முதல் 500 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு சூழலிலிருந்தே அதிக எண்ணிக்கையிலானவர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

பாடசாலை மாணவ, மாணவியருக்கு இடையில் கொரோனாத் தொற்று வேகமாக பரவவில்லை.

சுகாதார வழிகாட்டல்கள் உரிய முறையில் பாடசாலைகளில் பின்பற்றப்பட்டால் கொத்தணிகள் உருவாகும் சாத்தியம் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலைகளில் கொரோனா சுகாதார வழிகாட்டல்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படுவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு நாங்கள் அஞ்சவில்லை! ரோஹித

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *