பிபின் ராவத்தின் பதவிக்கு நரவனேயின் பெயர் பரீசிலனை!

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதை அடுத்து அவரது பதவிக்கு ஜெனரல் நரவனேயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் இந்தியப் படைகள் நேருக்கு நேர் நிற்கும் சூழ்நிலையில் முப்படைகளின் ஒத்துழைப்பும் செயல்திறனும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

அவரின் மறைவைத் தொடர்ந்து அப்பதவிக்கு நரவனேயை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *