ஹெலிகொப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் ராஜ்நாத் சிங்!

<!–

ஹெலிகொப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் ராஜ்நாத் சிங்! – Athavan News

முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்த அறிக்கையை பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை கூடவுள்ள நிலையில், காலை 11.15 மணியளவில் மக்களவையிலும், மதியம் 12 மணியளவில் மாநிலங்களவையில் அறிக்கை  தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இதன்போது குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளதாகவும், இதனையடுத்து ராஜ்நாத் சிங் அவை உறுப்பினர்களிடையே பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *