<!–
இலங்கை கடற்படை தனது 71ஆவது வருட நிறைவு நிகழ்வினை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகின்றது.
கடற்படை மரபுகள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் பரந்த அளவிலான நிகழ்வுகள் கொரோனா சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இன்று நடத்தப்படுவதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த அனைத்து மாவீரர்களும் இன்றைய நிகழ்வில் நினைவுகூரப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை கடற்படை தனது 71ஆவது வருட நிறைவு நிகழ்வினை முன்னிட்டு காலி முகத்திடலில் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.