சுவிஸ்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்வதற்கான புதிய இயந்திரம் கண்டிபிடிப்பு!

சுவிஸ்லாந்து தனது பயனர்களை வலியற்ற மற்றும் அமைதியான முறையில் ஒரு நிமிடத்தில் இறக்க அனுமதிக்கும் ‘தற்கொலை இயந்திரத்தை’ சட்டப்பூர்வமாக்கியுள்ளது

சவப்பெட்டி வடிவிலான ‘சார்க்கோ’ காப்ஸ்யூல் பயனர் கண்களை சிமிட்டுவதன் மூலம் உள்ளே இருந்து கூட இயக்க அனுமதிக்கிறது.

லாக்-இன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண் சிமிட்டினால் உள்ளே இருந்து இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.

லாக்-இன் சிண்ட்ரோம் என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். இது கண் அசைவைக் கட்டுப்படுத்துவதைத் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தன்னார்வத் தசைகள் முழுமையாக செயலிழந்துவிடும்.

கருணைக்கொலை சாதனம் ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியாவை தூண்டுவதன் மூலம் அதன் பயனருக்கு வலியற்ற மரணத்தை உறுதியளிக்கிறது. ஹைபோக்ஸியா என்பது திசு மட்டத்தில் ஆக்ஸிஜன் வழங்கல் இல்லாத ஒரு நிலை, அதேசமயம் ஹைபோகாப்னியா என்பது மனித இரத்தத்தில் குறைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைட் நிலை, இது மரணத்திற்கு வழிவகுக்கிறது.

தற்கொலை இயந்திரத்தை கண்டுபிடித்த எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் இயக்குனர் டாக்டர் பிலிப் நிட்ச்கே, அடுத்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சாதனம் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று நம்புகிறார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், சுமார் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *